Thursday, 14 August 2014

உரிமை நாள்.



உரிமை நாள்!

வெந்தணல் பூத்து விளைவாயெழுந்து—தீவிர
செந்தீ வார்த்த சீற்றஞ் சிவந்து
வெப்பம் தாளாமல் வெள்ளையரகன்று—உரிமை
வீரம் வென்ற நாளின்று.

இந்தியக் கண்டம் இந்தியாவென்று—புதிய
இரண்டாம் பிறப்பு நாளின்று.
இன்றுன் வயதும் என்றும் பதினாறு!—இளமை
இந்தியத் தாயே நீ வாழ்க!

கருணைக் கடலெனச் சிறந்தன்றுஇயற்கை
அருட்கொடை நீயே தாய்தானன்று. .
உரிமைக் குரலது உயிரெனக்கொண்டுதுடிக்கும்
உதிரம் கொட்டியும் ஒலித்தாய்நின்று..

தாயே என்னும் பந்தமுண்டுஅன்பின்
தாராள மடியின் சொந்தங்கொண்டு.
பேதம்பேணா குணமே நன்றுபண்பின்
பெருமை சொன்னது நீயென்று...

புரட்சி என்றொரு சொல்லுண்டுஅதுஉன்
புகழுக் கென்றே நின்றதன்று
வளர்ச்சி என்ற முயற்சிகொண்டு—ஒற்றுமை
வலிமை பெற்றதால் பலனுண்டு.

சுதந்திரம் முயன்று பெற்றதுண்டுஅதுவே
சுயநல வளற்சி ஆனதின்று.
ஜனநாயகம் அதுதான் உயிரென்றுஉலகின்
சரித்திர அடையாளம் போனதின்று..

பொதுவாழ் வென்ற பேச்சுண்டுஆனாலது
பொது ஜனத்தின் தூரமின்று..
அரசியல் நன்று படித்ததுண்டுசாணக்ய
அர்த்த சாஸ்திரம் எதிர்கொண்டு.  

அரசியலொரு தர்ம மென்றுஆண்ட
அறவழிப் பாடம் கொண்டதன்று..
அந்த அரசியல் வணிகமென்றுஅய்யோ
அழகு மாறிப் போனதின்று.

நவயுகம் வார்த்தை நலமுண்டுஅதுவும்
நடப்பினில் நிறைந்தால் மிகநன்று..
ஊழல் தானே ஒழியுமன்றுகணினி
ஆளும் நுட்பம் அமைதலன்று. 

காந்தி ராஜ்ஜியம் காண்பதுண்டுஅவரவர்
கடமை உணர்ந்தால் அமைதியுண்டு.
பரதநாடும் ஒருநாள் ஆவதுண்டு.அன்று
பழமை சிறப்பு பெறுதலுண்டு.

வேற்றுமை போற்றும் சக்திகொண்டு—ஒன்றில்
ஒற்றுமை கூட்டினால் உயர்வுண்டு.
ஆற்றும் பல்வழிக் கூட்டொன்று—திரண்டு
ஏற்றும் நல்வழி சுபமுண்டு.

எனக்கும் கூடஓர் ஆசையுண்டுஅதுஉன்
எதிர்காலம் வல்லரசா வதுகண்டு.
அன்று எனது முக்தியுண்டுஅந்நாள்
அனைத்தும் ஒன்றில் சக்தியுண்டு.
. 
கொ.பெ.பி.அய்யா.



  




Wednesday, 6 August 2014

உன்னையே தேடு.



புதிய கீதை.(1)

உன்னையே நீ உனக்குள்ளே தேடு
வெண்ணைத் திருடன் விளக்கிய கீதை
கண்ணைத் திறந்தது காண்டீபனை
மண்ணைப் புதுப்பித்தது மறுவரவை.

விவிலியம் குரான் விளக்கும் மறைகள்
அவசரம் கூறிடும் அற்புத நெறிகள்.
அவதார அவசியம் ஆற்றும் குறிகள்
நவயுகம் செய்யும் நீதியின் மொழிகள்.

கீதை விவிலியம் குர்ரான் புனிதமே!
பாதை பழக்கிய பண்பினை நனிதுமே!
ஆதி முதலது அன்பினை அமைத்தது
வேதம் அதுதான் என்பதைக் கதைத்தது.

தர்மம் உலகில் தவிக்கும் பொழுதெலாம்
அதர்மம் மனிதனில் செருக்கும் பொழுதெலாம்
கர்மம் துலக்கி மருவிப் பிறக்குமாம்
துர்மம் அழிக்கப் புதியதாய் கீதைகள்.

அதர்மம் அழிக்கும் அவதாரம் கண்ணன்.
அநீதி ஒழிக்கும் அவசரம் ஏசன்.
ஈகை இரக்கம் என நபி நேசன்
ஆகமம் தந்தும் அகிலம் காத்தனர்.  

தாயைப் பழித்திடும் பாவம் படர்வதும்.
சேயை ருசிக்கும் அவலம் தொடர்வதும்
கொள்ளை கொலை கொள்வதும் தொழிலோ?
கள்ளமும் கலையும் பேணுதும் செயலோ~!
  
பாவமோ தர்மம்! பலியிடும் சாபமோ!
கோபமோ கர்மம்! கொலைபடும் நாசமோ!
இன்னொரு தூதன் எழுச்சியும் மெய்யாமோ!
பின்னொரு வேதம் புரட்சியும் செய்யுமோ!


கொ.பெ.பி.அய்யா.

தொடரும்.      


Sunday, 6 July 2014

ஊருக்குத் தெரியும்.


ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியும் உன்னோட பொழப்பு.
தேருக்கு எதுக்கு தேடுற அழப்பு?
மோருக்குக்குத் தயிருன்னு பேரென்ன சிறப்பு?
யாருக்குப் புரியாது ஆளோட இருப்பு!

என்னென்ன வேசங்கள் இன்னும்தான் போடுற
கண்ணென்ன மோசமா கதமாத்தி ஆடுற
முன்னாடி பின்னாடி கண்ணாடி மூடுற
என்னான்னு எல்லாந்தான் தன்னால காட்டுற.!

வேட்டி ரெண்டாக் கிழிஞ்ச துன்னு 
மாத்தி மாத்திக் கட்டுற—அப்போ
வேலி தாண்டித் திருடும் போது 
கிழிஞ்ச கதையும் மறக்குற.

கோவணமும் உருவிவிழும் கேவலமானாலும்.
காரணமும் காத்துன்னுதான் களவுசொன்னாலும்.
பாவாட திருடவந்த படுவாமாட்டுனே!--செவிடனுக்கும்
சேவல்கூவும் சத்தம் கேக்குண்ணே!

மானம் கெட்டுப் போனே யின்னும்
மாரில் சுட்டக் கோடு ஒண்ணும்
வானம் முட்டக்கூறிச் சிரிக்குமே-
ஊரில் ஏண்டா பொய் உனக்குமே.?.  

கள்ளம்கொண்ட உள்ளம்கொண்டு பள்ளம் நோண்டயிலே
வெள்ளம்கண்டு உள்ளமுங்கி துள்ளும் போதிலே
சொல்லும் சொல்லும் கொல்லுமென்ற மெய்யறியாமலே
அள்ளும்ஊரைக் கொல்லென்பயோ வாய்க் கொழுப்பாலே!

உன்வினையே உன்னழிவே ஆனதென்றாலும்
ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உண்மையதுவாகும்.
தொலைத்த இடம்தேடாமல் பழிப்பதென்னாகும்?
பிழையறியா மூடனே பேச்சென்னாகும்?

சொந்தங்களும் சுற்றங்களும் சுத்தம் செய்யாமல்
வந்தபழி என்னவென்றும் கற்றும் கொள்ளாமல்.
நொந்துமற்ற நேயங்களை குற்றம் சாற்றினால்
எந்தஊர் நாயமாகும் சற்றும் அறிவினால்.
.
கொ.பெ.பி.அய்யா.






Thursday, 5 June 2014

உழவும் எழுத்தும்.


மகனே எழுந்து விடு.

எழுதிடும் வசமே எழுத்து வரும்.
தொழுதிடும் சாமி துணை வரும்.
உழுதிடும் நிலமே உணவு இடும்
அழுதிடும் மகனே எழுந்து விடு.

தடமிடத் தானே பாதை வரும்.
கடந்திடத் தானே ஊரு வரும்.
உழைத்திடத் தானே வரவு இடும்.
கலங்கிடும் மகனே கவலை விடு.

அறிந்திடும் மனமே அறிவு பெறும்.
புரிந்திடும் குணமே .புலமை பெறும்.
தெளிந்திடும் அறிவே தீர்வு இடும்.
குழம்பிடும் மகனே கலக்கம் விடு.

தேடிடும் பொழுதே கூடி வரும்.
நாடிடும் பொருளே தேடி வரும்.
முயன்றால் முடிவு முந்தி இடும்
அயர்ந்திடும் மகனே அயர்வு விடு.

வண்ணம் பலவும் வரைய வரும்.
வரைய வரைய வடிவம் வரும்.
எண்ணம் அழகினை எழுதி இடும்.
திண்ணம் மகனே தேர்ந்து விடு.

இடிந்த கோவிலும் எழுந்து வரும்.
முடிந்த முன்வினை தொடர்ந்து வரும்.
படிந்து எழுவது பண்பு இடும்.
படிக்கும் மகனே பழகிவிடு.

தீயோர் கூட்டம் ஓடி வரும்.
நேயம் பாடி கூட வரும்.
வாயில் திறந்தால் வரிசை இடும்.
நோவது மகனே தள்ளி விடு.

பாவ வினைகள் பற்ற வரும்.
கூவம் போலவே நாற்றம் வரும்.
பாவியர் பார்வை பாவம் இடும்.
பாராது மகனே விலகி விடு.

கொ.பெ.பி.அய்யா.





http://ayyavinkavithai.blogspot.in/

Sunday, 25 May 2014

சண்டாள ஈழன்.

என்ன இது அநியாயம்

என்ன இது அநியாயம்
உன்னிடமும் இல்லை நியாயம்.       
சொன்னதெல்லாம் நிசந்தானோ!-உனக்கு.
சொந்தந்தானோ ராஜபச்சே!

கண்ணீரில் கடல் பெருக்கி
கப்பல் விடும் சண்டாளன்
உன் முடிசூட்டு விழாவிற்கு-பாவி
உற்ற திருஷ்டி பூசணிதான்.

செந்நீரில் குளம் நிறப்பி
செழிக்கக் குளித்தவன்தான்
காட்டேரி அவனேதான்--மனித
காவுபூஜை முடித்தவன்தான்.

பூதம் வந்து முடி சூட்ட
பாவம் என்ன செய்தாயோ!
வேதம் கற்ற நீ கூட—பாவம்
விதிவசம்ஆனாயோ!  

புண்ணியர் வாழ்த்தினால்
புகழ் இன்னும் கூடுமன்றோ!
பாவியரை அழைத்தாயோ!-தமிழ்
பாவம் உன்னைச் சூழுமன்றோ!

தமிழன் என்றால் ஏளனமோ!
தமிழினம் வேண்டாமோ!
தமிழ் இல்லா இந்தியாவோ!-அய்யா
தமிழ் செய்த பாவம் என்ன?

உடன் பிறந்த இந்தியனை
திடங்கொண்டு கொன்றவனை
கடன் என்று அழைப்பாயோ!-எம்மை
ஜடம் என்றும் நினைப்பாயோ!

அவன் செய்த இலாபம் என்ன?
நாங்கள் செய்த பாவம் என்ன?
எம்முணர்வைக் கொல்வதற்கு—நீயும்
எத்தனை நாள் தவமிருந்தாய்?

பாவியர்கள் தொலைந்தாரென்று
பகல்கனவா கண்டிருந்தோம்.
ஆவியாய் உன்னுருவில் –மீண்டும்
அவர் வந்தும் பூந்தனரோ!

என்றுதான் விடியுமோ!
எங்கள் தமிழ் ஆளுமோ!
அன்றுதான் பாரதம் –தமிழ்
அதிலும் ஒரு அங்கமாமோ!

கொ.பெ.பி.அய்யா.



Monday, 7 April 2014

பணம்!

பணம் பணம்

பணம் இருந்தாலே மணம் மணம்!
பணம் இல்லேன்னா பிணம் பிணம்.
பணமும் குணமும் பொருந்தா உறவு—நாறப்
பிணமானாலும் பணமிருந்தாலே கணம் கணம்.

உண்டியல் இல்லா கோவில்கள் இல்லை
உள்ளவன் நுழைவான் சன்னதி எல்லை
தண்டியல் தங்கத்தில் இளித்திடும் பல்லை—சுமந்து
தூக்கவும் கேட்பான் கட்டண வில்லை.

கைகட்டி நிற்பான் பணமில்லா ஏழை.
கடவுளாய்த் தொழுவான் பணமுள்ள ஆளை.
அணுவும் அசையாது அவனன்றி வேளை—ஒரு
பணமின்றி இசையாது பழகியும் வேலை.

கூடுதல் பணமே கோட்டையை பிடிக்கும்.
கொள்கையை விற்றும் குடும்பத்தை வளர்க்கும்.
சத்தியம் எல்லாம் சவக்குழி தள்ளும்—எதையும்
சாதிக்கத் துணிந்தால் சர்வமும் கொல்லும்.

மரணத்தைக்கூட மயக்கம் ஆக்கும்.
வர்ணம் மாறியும் வனப்பில் பூக்கும்.
இன்று நடப்பதை என்றோ மாற்றும்---ஐயோ
ஒன்றுக்கு மாகாததை நன்றெனப் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா. 



Friday, 4 April 2014

கண்ணாடி.

கண்ணாடி

கண்ணாடி என்னதான்  சொல்லுது?
முன்னாடி உண்மைதான் காட்டுது.
ஒன்பதும் உன்னிடம் இருக்குது.
என்பதும் எண்ணிட விளக்குது.

அகத்தினில் உள்ளதை வரையுது
முகத்தினில் அப்படியே தெரியுது.
நிசமான உன்முகம் மறையுது.
வசமான உன்னகம் நிறையுது.

எண்ணம் குளிர்ந்த உணர்ச்சியை.
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சியை.
வண்ணம் கவர்ந்த நெகிழ்ச்சியை
சொல்லும் வதனம் மலர்ச்சியை.

இன்பம் துன்பம் எதுவானாலும்
எண்ணும் வண்ணம் இரண்டானாலும்
எழுதிச் சொல்லும் வெவ்வேறாய்
இதயம் பதித்த முகவுரையாய்.

கோபம் தாபம் கொந்தளிப்பில்
குழம்பிக் கிடக்கும் அவசரத்தில்
பாவம் புண்ணியம் தெளியாமல்
படும்முன் உணர்க முகவரியில்.

தெளியா மனதினில் தேடாதே!
விழியா உணர்விடம் கூடாதே!
புரியா மொழியதில் படிக்காதே!
அறியா முகத்துடன் தொடராதே!

கண்ணாடி முன்னின்று உனைத்தேடு
பின்னாடி பின்னன்று தனைக்கூடு.
எண்ணாடி ஒண்ணின்று உரம்தீட்டு.
நன்றென்று வாழ்கவே தரம்சூட்டு.

கொ.பெ.பி.அய்யா.

















Saturday, 29 March 2014

வெறுங்கூச்சல்.

வெறுங் கூச்சல்.

கருப்புப் பணம் வங்கிகளில்
இருளில் ஏழை குடிசைகள்.
பாவம் ஜனநாயகம்.

புளிச்சேப்பம் பணக்காரனுக்கு.
பசியேப்பம் ஏழைக்கு.
சுதந்திரம் யாருக்கு?

பெட்டிப்பணம் தேர்தலில்
கொட்டுவது சீமான்கள்.
கூலிதான் ஏழைக்கு.

ஏழைக்கு ஏணி என்பான்
ஏறுவான் கொழுத்தவன்.
இதுதான் இந்தியா.

வரிச்சலுகை முதலாளிக்கு மொத்தமாய்.
வாக்குவங்கி ஏழைக்கு இலவசம்
வாக்கரிசி மட்டுமே.

வெறுங்கூச்சல் வேட்டிசேலைத் தேர்தலே
வந்துதான் கிழிப்பதென்ன வாழ்விலே
வெட்டிவேலை வேறென்ன ஏழைக்கு?

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 February 2014

ஹலோ காலன்.

ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!

காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை--தூதன்
ஊதுஞ் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லை.
காலன்  ஹலோ சொன்னதும் எமனவன்
வேலையை  எளிதாக முடிக்கிறான்!


கொ.பெ.பி.அய்யா.




அரசியல் வேண்டாம்.

வேறு வேலை என்ன?

அரசியல் வேண்டாமே!
ஆதாயந்தரும் வேறு
வியாபாரம்  பண்ணலாமே!
அதுதான்  உங்களுக்கு
சரியாக  இருக்கும்........

என்ன  சொல்கிறீர்?
புரியவில்லை.................!
ஓகோ...............................
புரியும் விதத்தில் பேசத்
தெரியாதோ!
புரிந்து  கொண்டால்
தொண்டர்கள்-
நிற்கமாட்டார்களோ!

தொடரட்டுமுங்கள்
தொழில் .இதைவிட
இலாபம்  வேறெதில்
இருக்கப்  போகிறது.!

எதற்கும் கண்ணாடியில்
ஒருமுறை முகத்தைப்
பார்ததுக்  கொள்ளுங்கள்.!

உங்களைப் பார்த்தால்
உங்களுக்கே கேவலமாகத்
தோன்றவில்லையா?

==============================

சுனாமி.

வேண்டாம் சுனாமி!

கால்களைக் கழுவுகிறாய்.
கரவோசை எழுப்புகிறாய்..
வரவேற்புச் செய்கிறாய்..
வந்திருப்போன் கவிஞனென்றோ!

நன்றி!நன்றி!வாழி நீ!
நானுமுன்னைப் பாடுகிறேன்..
ஆனாலும் கோபம்தான்.........
அனுப்பியதேனோ சுனாமியை!

உயிர்கள் யாவும் உன்னில்தானே
உதயம் செய்தாய் ஆதியிலே.
தாயான நீயே எம்மை
தவிக்கச் செய்தல் நீதியாமோ!

உணவளிக்கும் களஞ்சியமே!
உரிய தேவைப் பொக்கிசமே!
கரையில்லாக் கருணையே!
கடலம்மா வாழ்க நீயே.!

வானந் தந்த நிறமழகு.
வணங்குமவன் செயலழகு.
காற்றனுப்பும் உன்னலைகள்
கானம் பாடும் இசையழகு.

கூடியெழுகிற கதிரவனழகு.
ஓடித்துள்ளும் மீன்களழகு.
மயக்குமினிய மதியொளியழகு.
மௌனம் பேசும் காற்றுமழகு.

இனியொரு சுனாமி  
எப்போதும் செய்யாதே..!
துணை காப்பாய் நீயம்மா!
இணையில்லாத் தாயம்மா!



கொ.பெ..அய்யா.




வீடொன்று சொந்தம் வேண்டும்.

வேண்டும்! வேண்டாம்!.

வீடொன்று சொந்தம் வேண்டும்.
காடழித்து வீடு வேண்டாம்
கழனி செய்யக் காணி வேண்டும்.
காணியொழித்து மனைகள் 
வேண்டாம்.

நதிகளல்லாம் இணைய வேண்டும்.
நாட்டிலினி பஞ்சம் வேண்டாம்.
நாடொன்றாய் ஆகவேண்டும்.
நமக்குள்ளே சண்டை வேண்டாம்.

வேளாண்மை வாழ வேண்டும்.
ஆளாண்மை வீழ வேண்டாம்.
தொழிலாண்மை பெருக வேண்டும்.
தூரம்போமை மறுக வேண்டாம்.

தானியங்கள் பெருக்க வேண்டும்.
தரிசாதல் பெருக வேண்டாம்.
ஏற்றுமதிச் சிறக்க வேண்டும்.
இறக்குமதி செய்ய வேண்டாம்.

கிராமங்கள் செழிக்க வேண்டும்.
கிரமங்கள் அழிக்க வேண்டாம்.
பட்டிகள் நிலைக்க வேண்டும்
பட்டணம் நினைக்க வேண்டாம்.

அரசியல் தொடர வேண்டும்.
விரசியல் படர வேண்டாம்.
கட்சிகள் சுருக்க வேண்டும்.
காழ்ப்புணர்ச்சி வளர்க்க வேண்டாம்.

சேவை மொழிப் பேச்சு வேண்டும்.
மேடையிழிக் கூச்சல் வேண்டாம்.
செதுக்கு உறைச் சீர்மை வேண்டும்.
அடுக்கு மொழி கீழ்மை வேண்டாம்

பொது நலத் தூய்மை வேண்டும்.
பதுக்கு இழி பேய்மை வேண்டாம்.
எதிர்ப்பு நிறை வாய்மை வேண்டும்
குதர்க்கக் கறைத் தீய்மை 
வேண்டாம்ன்.

கொள்கையிற்  தவேண்டும்.
கொள்வதில் மடம் வேண்டாம்.
வெல்வதிற் செயல் வேண்டும்.
கொள்வதில்ர் மயல் வேண்டாம்.

ரஅன்புள்ளம் இருக்க வேண்டும்.
அன்பில்லம் முளைக்க வேண்டாம்.
தன்னிறைவு ஆக்க வேண்டும்.ி
பொன்விழைவுப் பூக்க வேண்ாடாம்.

தன்மனைக் காதல் வேண்டும்.
பிறன்மனைத் தேடல் வேண்டாம்.
சன் மார்க்கப் பாதை வேண்டும்.
வன்னோக்கப் போதை வேண்டாம்.

தேவைகள் சமம் வேண்டும்.
காவல்கள் சேமம் வேண்டாம்.
ஆசைகள் நலம் வேண்டும்
அடைபாவத் தூபம் வேண்டாம்,

நியாயங்கள் நெஞ்சில் வேண்டும்.
நீதிமன்றம் நாட வேண்டாம்
சத்தியம் போற்ற வேண்டும்.
சட்டங்கள் ஏற்ற வேண்டாம்.

அனைவர்க்கும் கல்வி வேண்டும்.
அதுபேரம் ஆக வேண்டாம்.
வாழவொரு வேலை வேண்டும்.
ஆனபின் ஊழல் வேண்டாம்.

உழைப்பதில் உண்மை வேண்டும்.
பிழைப்பதிற் சிறுமை வேண்டாம்.
கடமையிற் திண்மை வேண்டும்.
உடமையில் வன்மை வேண்டாம்.

வேதங்கள் படிக்க வேண்டும்.
பேதங்கள் பேச வேண்டாம்
பண்பினைப் பழக வேண்டும்.
பாவங்கள் நிலவ வேண்டாம்.

கொண்டதிற் பற்று வேண்டும்.
பணடதிற் அற்று வேண்டாம்.
தொண்டதிற் கட்டு வேண்டும்.
மண்டதிற் கெட்டு வேண்டாம்.

சமுதாயம் ஒன்று வேண்டும்.
சாதிகள் என்று வேண்டாம்
பேசவொரு மொழி வேண்டும்.
பிறமொழிகள் இழி வேண்டாம்.

காதல் மண்ணில் மீள வேண்டும்.
சாதி மதம் ஆள வேண்டாம்.
மனிதம் கண்ணில் ஒளிர வேண்டும்.
மடமை நெஞ்சில் துளிர வேண்டாம்.

சமத்துவம் அடைய வேண்டும்.
சலுகைகள் விழைய வேண்டாம்.
எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்.
இல்லாமை இருக்க வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.





வேகம் வேண்டாம்.

வேகம் எதற்கு?

இத்தனை வேகமெதற்கு?
அத்தனை அவசரமோ உமக்கு!!
அவசியமான அவசரமானாலும்
விவேகமான வேகமானாலும்
விளைவுக்கு உத்ரவாதமில்லை.
விளக்கிட வேறெதுவுமில்லை.

அவசரமும் வேகமும்.அனுபவமின்மை.
திடீர்த் திட்டஙகளும் திடீர் முடிவுகளும்.
அவசர வேகங்களின் அன்னை தந்தை.
காலத்தின் வேகத்திற்கு ஈடிருக்கலாம்
காலத்தை முந்தும் முயறசி வேண்டாம்.
காலமெப்போதும் அவசரப்படுவதில்லை..

வேகப்பயணமே மகிழ்ச்சியானால்
போகுமிடமோ பூமியைத் தாண்டுமே!
ஆகுஞ்செயலுக்கு அவசரமாகாது.
ஆவது நலமானால் போவதெது?
வாழத்தானே முயலுகின்றோம்
வேறெதற்கு வேகமோ!அவசரமோ!

பொறுமை வாழ்கவென்றேனே
புரியவில்லையோ உமக்கு.!!
பிறவி கிடைத்ததே அதிசயம்.
பேணுவதெவ்வளவு அவசியம்!
அவசரமும் வேகமும் ஆபத்தின்
அழைப்பென்றே அறிவீரேவாழ்வீரே!!


கொ.பெ.பி.அய்யா.







வெள்ளை வெளுத்திடும்.

வெளுத்திடுமா வெள்ளை?

பொழுதும் வெளுத்து அலுத்துவிட்டேன்--நானும்
புறப்படத்தான் போகின்றேன்.
அழுதும் முடித்து ஓய்ந்துவிட்டேன்--பின்னும்
ஆயிரமாய் தொடர்வாரே!

அழுக்கும் தொலைந்து ஒழியவில்லை--ஏனோ
வெளுத்தும் வெள்ளை ஆகவில்லை.
இழுக்கும் கலைந்து அழியவில்லை--நானோ
வெளுத்தும் பயனுமில்லை.

தினமும் வெளுத்திருந்தால் நலமே--தூய்மை
துணியில் தொடர்ந்திருக்கும்.
என்றோ வெளுத்தயிது முழுமை--வெளுமை
இன்றே ஒளிர்ந்தும் மிளிராது.

வள்ளுவன் காலம் தொட்டுப் புலவர்--எல்லாம்
அள்ளி வெளுத்துவிட்டார்.
இன்னும் தீரவில்லை வெளுத்தும்--அதனால்
ஒன்னும் மாறவில்லை,

ஆசை அழுக்கினை அகற்றிடப் புத்தன்--அவனும்
அலசித் துவைத்தாலும்
வேசை போலவே விடாது பற்றி--மனிதம்
வெளுத்த பாடில்லையே!

புத்தன் வெளுத்தும் அழியா மலங்கள்--இவை
எத்துணைதான் வெளுத்திடும்
சித்தம் மாசில் புத்தம் பேசுங்கொடிய--அவனின்
பித்தம் யார் வெளுப்பார்?

உயிர்கள் வதையா மனிதம்  தானே--மதங்ள்
உரைக்கும் மறைமொழிகள்.
உள்ளம் வெளுக்க எழுந்ததுதானே--வதங்கள்
உலகில் செய்திடுமோ!

ஊழல் கறையோ ஒழிந்த பாடில்லை--ஆடை
கிழியும் வரையும் அழியாது.
சாதி மதப் புகையிலைக்கறையை--கரை
வேதி மருந்தும் வெளுக்காது

தர்மம்  வெளுக்க உழைத்தது--எல்லாம்
வர்மச் சேறாய் ஆனது.
கர்மம் கண்ணாய் வெளுத்தாலும்--தீய
கறையொழிந்தும் தீராது.

தீரா அழுக்கை பூராம் வெளுக்குமோ--தீர
ஊராச் சேர்ந்து வெளுத்து
தாரா வெள்ளை ஆராக் காத்து--மனது
நேராய் வாழப் பழக்லாம்.

கொ.பெ.பி.அய்யா..