Tuesday, 25 November 2025

சொத்துக்கு சொத்தாக.

சொத்துக்கு சொத்தாக.

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

நீரோடா ஆறை இங்கு--தமிழ்
யார் பாடக் கூடுமடா?
சீராளும் செந்தமிழா!—தமிழ்
ஊர் உன்னைப் பாடுமடா!

பாரதியும் தமிழ் வளர்த்தான்—தமிழ்
பசியிலே தான் மகிழ்ந்தான்.
ஊரவனைத் தேடவில்லை—தமிழ்
உலகம் இன்று பாடுதடா!

குறள் பாடிய வள்ளுவனோ—தமிழ்
கொடுக்கும் என்றும் பாடவில்லை.
ஊருலகம் அவன் புகழை—தமிழ்
ஓத நாளும் மறக்கவில்லை.`

ஔவை அந்தக் கிழவியவள்—தமிழ்
அழகி வாழுங் கன்னியவள்.
செவ்வைவழி காட்டித் தானே—தமிழ்   .
செழிக்கத் தான் சுழன்றாள்.

இலக்கியங்கள் செய்தோரை –தமிழ்
ஏற்றவில்லை உப்பரிகை.
விளங்க வாழ்ந்த வித்தகரை—தமிழ்
வெஞ்சாமரம் ஆற்றுதடா.  

என்னதரும் என்று எண்ணி—தமிழ்
எழுதுவது வியாபாரம்.
பின்னவரும் நலம் இயற்றி—தமிழ்
பிறவி நீயும் வாழ்வாயடா!

சொத்துக்கு சொத்தாக –தமிழ்
சொந்தத்தின் வித்தாக.
பத்திரமே முத்திரையே—தமிழ்
பாசறையே கண்வளராய்.

கொ.பெ.பி.அய்யா.

மெட்டு:முத்துக்கு முத்தாக.

Saturday, 22 November 2025

இயற்கை அழுகிறது.

இயற்கை அழுகிறது!

இயற்கை நானே அழுகிறேன்!
என்னை நீயே வதைப்பதால்!
செயலிழந்தேன் என் செய்வேன்
சிதைகிறேனே உன்னோலே!

என்னை மட்டும் பழிக்காதே!
உன்னை விட்டும் விலக்காதே!
முன்னை ஆய்ந்த அறிஞர்களும்
சொன்னதையும் மறக்காதே!

ஊழிக்கால  மழையதுதான்
உணரத்தான் கேத்ரிநாத்!
இமயத்தின் பேரழிவாய்
இயற்கை எனது எச்சரிக்கை!

காடழித்து வீடமைத்தாய்!
கேடதுதான் கேத்ரிநாத்!
வீடெழுந்தும் சரிந்ததோ!
விபரீதம் நேர்ந்ததோ!

வாகனங்கள் புகைஊதல்
மேகமாக சேர்ந்த தூசி
தண்ணோசோன் கிழிந்ததோ!
விண்ணழுது அழிந்ததோ!

சமநிலை இழந்தேனோ!
எமநிலை ஆனேனோ!
இனியேனும் உணர்வாயோ!
இயற்கையெனை மதிப்பாயோ!

வெப்பம் தினம் உயர்கிறது!
தப்பாகிறது  பருவங்கள்!
பனி உருகிப் பெருக்காகும்!
பேரலைகள் ஊரழிக்கும்!

கொதித்த ஆதி பூமியை
குளிர்வித்த கொட்டுமழை!
விதித்த விதி அதுவானால்
வெள்ளம்தான் உச்சநிலை!

உலகம் மட்டும் சுழலாம்!
உயிர்கள் மட்டும் வாழாது!
புத்துலகம் வளர்வதற்கும்
புல்லுங்கூட மிஞ்சாது!

எவர் இதனை பாடவில்லை
இவனின்று பாடிவிட்டான்!
கவனித்தால் நலமுண்டு!
காலத்தின் துணையுண்டு!

கவிஞர் கொ.பெ.பிச்சையா.







Saturday, 8 November 2025

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தாய்ப்பால போலகள்ளு தந்த பனை கதறுதய்யோ!
மாய்ந்து சாயும்  சேய்களுக்கு தாய்ப்பாலுந் தடையோ அய்யோ!
அவணியெங்கும் அவலக்குரல்
அறுந்துவிழும் தாலிக்குவியல்,
வித்தகாசும் போதுந்தானோ!-இந்தா
செத்ததெல்லாம் வித்திடய்யோ!

கள்ளக்குறிச்சி கண்ணீராறோ
எல்லைமீறி ஓடுதய்யோ!
நாடெங்கும் பேராச்சோ
கேடோங்கும் சாவாச்சோ!
போதைக்கிது வியாபாரமோ
வாதைக்கிது சாபமோசமோ!
வெந்த மனம் நீரல்லய்யோ-அந்த
வேசிமக்கள் சோரல்லய்யோ

கள்ளத்தன சாராயம் கண்டாரோ மாண்டாரோ!
கொல்லத்தான் வித்தாரோ கொலகாரப் பாவிகளோ!
என்ன பாவம் செஞாசோமோ
எம்தாலி அறுத்தீரோ!
விசத்தை வித்தும் வாழலாமோ-அந்த
நிசத்தச் சொல்லி மாளலாமே!

தாய்ப்பாலும் கள்ளிருக்க
தாய்போல சொல்லிருக்க,
கொலகாரப் பாவி வித்த
கொடியவிசம் குடிச்சீரய்யோ!
பொண்டாட்டி புள்ளைகள
திண்டாட விட்டீரய்யோ!
என்னய்யோ சொல்லி அழ-இன்னும்
பெண்டு நாங்கள் விதவையய்யோ!

கொ. பெ. பி. அய்யா.

Monday, 3 November 2025

திருடாதே தம்பி மெட்டு


மேலும் கண்டறிக
எழுத்து

குடிக்காதே தம்பி குடிக்காதே

குடிக்காதே தம்பி குடிக்காதே

குடிக்காதே தம்பி குடிக்காதே!!

குடிக்காதே தம்பி குடிக்காதே
குடிக்காதே தம்பி குடிக்காதே
அடிமைத் தனமாய் மயங்கிவிடாதே
குடும்பம் இருக்கு மறந்துவிடாதே! (குடிக்காதே)

பாட்டிலைப் பாரு எழுத்தும் பாரு
பழகும் முன்னே படிச்சுக்கோ—குடிக்கப்
பழகும் முன்னே படிச்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ
குடியே குடியைக் கெடுக்கும் என்று
கூறும் வரிகளைப் புரிஞ்சுக்கோ (குடிக்காதே)

வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது
வட்டம்போட்டு கெடுக்குற கூட்டம்
திட்டம் போட்டு வளையுது`--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது `--உன்னை
கட்டம் கட்டி இழுக்குற கூட்டம்
மட்டம் போட்டே அலையுது
நினைத்து உனையும் உணராவிட்டால்
நீசரைநீ தப்ப முடியாது.
குடிப்பவன் தானே திருந்தாவிட்டால்
குடியை ஒழிக்க முடியாது. (குடிக்காதே)

கெடுக்குற காலம் கலிகாலம்—இனி
தடுக்குற முயற்சி இருக்காது.—குடி
தடுக்குற  நிலைமை வாராது.
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
குடிக்கத் தடையும் சட்டம் போட்டா
வடிக்கிற தொழிலும் உருவாகும்—அதை
தடுக்குற படையே வளமாகும்.
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
குடிக்கிற பழக்கம் மறந்து போயிட்டா
கெடுக்குற குடியும் இருக்காது. (குடிக்காதே)

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Saturday, 1 November 2025

மலர்களின் பாக்யம்.


மலர்கள் செய்த பாக்கியம்

கொடியில் பூத்த இந்தப் புதுமலர்கள்
விடியல் கண்டாடுகின்றன!
இன்னும் சில மணித்துளில்
மண்ணில் உதிர்வதையும்
மறந்தே சிரிக்கின்றன---ஆனால்
இப்போதுவரை அது தன்
தாயின் மடியிலேயே துயில்கின்றன!
தொட்டியில் விழும்
குழந்தைகள் மட்டும் ஏன்
பிறக்கும் போதே அனாதைகளாகின்றன!
மலர்கள் செய்த பாக்யமென்ன?


கொ.பெ.பி.அய்யா.

சுந்தரத் தமிழ்.

கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!

தமிழ்மகளேதமிழ்மகளேவா!வா!
கமழுந்தமிழ் சுதந்திரமே வா!வா!
தமிழீழம் மலர்ந்ததென்றே வா!வா!
தமிழரிங்கு தலை நிமிர்ந்தோம் வா!வா!

தமிழாளுந் தனியரசி வா!வா!
தரணிக்கு வல்லரசி வா!வா!..
அமிழ்தமே இலக்கியமே வா!வா!
ஆணவஞ்சிதைத்தவளே வா!வா!

உலகத்தின் தலைமகளே வா!வா!
விலகுமிருள் விடியலே  வா!வா!
குலமுயர்த்துங் கலைமகளே வா!வா!
பலமருளி பகையழித்தாய் வா!வா!

ஒற்றுமையின் உணர்வே நீ வா!வா!
பற்றுணர்த்துந் தாயே நீ வா!வா!
மாற்றாருந் தொழுவோளே வா!வா!
வேற்றுமை யொளித்தோளே வா!வா!

காற்றாகி மூச்சான கருணையே வா!வா!
ஊற்றாக உரிமையின் விளக்கமே வா!வா!
ஏற்றியே எந்நாளும் போற்றுவோம் வா!வா!
தூற்றினோம்  பூமழை புத்ததாண்டே வா!வா!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா..