Tuesday, 18 February 2014

ஹலோ காலன்.

ஹலோ !காலன்தான் பேசுகிறேன்!!!

காதில் ஹாரன் ஒலி கேட்கவில்லை--தூதன்
ஊதுஞ் சங்கொலியும் உனக்குக் கேட்கவில்லை.
காலன்  ஹலோ சொன்னதும் எமனவன்
வேலையை  எளிதாக முடிக்கிறான்!


கொ.பெ.பி.அய்யா.




அரசியல் வேண்டாம்.

வேறு வேலை என்ன?

அரசியல் வேண்டாமே!
ஆதாயந்தரும் வேறு
வியாபாரம்  பண்ணலாமே!
அதுதான்  உங்களுக்கு
சரியாக  இருக்கும்........

என்ன  சொல்கிறீர்?
புரியவில்லை.................!
ஓகோ...............................
புரியும் விதத்தில் பேசத்
தெரியாதோ!
புரிந்து  கொண்டால்
தொண்டர்கள்-
நிற்கமாட்டார்களோ!

தொடரட்டுமுங்கள்
தொழில் .இதைவிட
இலாபம்  வேறெதில்
இருக்கப்  போகிறது.!

எதற்கும் கண்ணாடியில்
ஒருமுறை முகத்தைப்
பார்ததுக்  கொள்ளுங்கள்.!

உங்களைப் பார்த்தால்
உங்களுக்கே கேவலமாகத்
தோன்றவில்லையா?

==============================

சுனாமி.

வேண்டாம் சுனாமி!

கால்களைக் கழுவுகிறாய்.
கரவோசை எழுப்புகிறாய்..
வரவேற்புச் செய்கிறாய்..
வந்திருப்போன் கவிஞனென்றோ!

நன்றி!நன்றி!வாழி நீ!
நானுமுன்னைப் பாடுகிறேன்..
ஆனாலும் கோபம்தான்.........
அனுப்பியதேனோ சுனாமியை!

உயிர்கள் யாவும் உன்னில்தானே
உதயம் செய்தாய் ஆதியிலே.
தாயான நீயே எம்மை
தவிக்கச் செய்தல் நீதியாமோ!

உணவளிக்கும் களஞ்சியமே!
உரிய தேவைப் பொக்கிசமே!
கரையில்லாக் கருணையே!
கடலம்மா வாழ்க நீயே.!

வானந் தந்த நிறமழகு.
வணங்குமவன் செயலழகு.
காற்றனுப்பும் உன்னலைகள்
கானம் பாடும் இசையழகு.

கூடியெழுகிற கதிரவனழகு.
ஓடித்துள்ளும் மீன்களழகு.
மயக்குமினிய மதியொளியழகு.
மௌனம் பேசும் காற்றுமழகு.

இனியொரு சுனாமி  
எப்போதும் செய்யாதே..!
துணை காப்பாய் நீயம்மா!
இணையில்லாத் தாயம்மா!



கொ.பெ..அய்யா.




வீடொன்று சொந்தம் வேண்டும்.

வேண்டும்! வேண்டாம்!.

வீடொன்று சொந்தம் வேண்டும்.
காடழித்து வீடு வேண்டாம்
கழனி செய்யக் காணி வேண்டும்.
காணியொழித்து மனைகள் 
வேண்டாம்.

நதிகளல்லாம் இணைய வேண்டும்.
நாட்டிலினி பஞ்சம் வேண்டாம்.
நாடொன்றாய் ஆகவேண்டும்.
நமக்குள்ளே சண்டை வேண்டாம்.

வேளாண்மை வாழ வேண்டும்.
ஆளாண்மை வீழ வேண்டாம்.
தொழிலாண்மை பெருக வேண்டும்.
தூரம்போமை மறுக வேண்டாம்.

தானியங்கள் பெருக்க வேண்டும்.
தரிசாதல் பெருக வேண்டாம்.
ஏற்றுமதிச் சிறக்க வேண்டும்.
இறக்குமதி செய்ய வேண்டாம்.

கிராமங்கள் செழிக்க வேண்டும்.
கிரமங்கள் அழிக்க வேண்டாம்.
பட்டிகள் நிலைக்க வேண்டும்
பட்டணம் நினைக்க வேண்டாம்.

அரசியல் தொடர வேண்டும்.
விரசியல் படர வேண்டாம்.
கட்சிகள் சுருக்க வேண்டும்.
காழ்ப்புணர்ச்சி வளர்க்க வேண்டாம்.

சேவை மொழிப் பேச்சு வேண்டும்.
மேடையிழிக் கூச்சல் வேண்டாம்.
செதுக்கு உறைச் சீர்மை வேண்டும்.
அடுக்கு மொழி கீழ்மை வேண்டாம்

பொது நலத் தூய்மை வேண்டும்.
பதுக்கு இழி பேய்மை வேண்டாம்.
எதிர்ப்பு நிறை வாய்மை வேண்டும்
குதர்க்கக் கறைத் தீய்மை 
வேண்டாம்ன்.

கொள்கையிற்  தவேண்டும்.
கொள்வதில் மடம் வேண்டாம்.
வெல்வதிற் செயல் வேண்டும்.
கொள்வதில்ர் மயல் வேண்டாம்.

ரஅன்புள்ளம் இருக்க வேண்டும்.
அன்பில்லம் முளைக்க வேண்டாம்.
தன்னிறைவு ஆக்க வேண்டும்.ி
பொன்விழைவுப் பூக்க வேண்ாடாம்.

தன்மனைக் காதல் வேண்டும்.
பிறன்மனைத் தேடல் வேண்டாம்.
சன் மார்க்கப் பாதை வேண்டும்.
வன்னோக்கப் போதை வேண்டாம்.

தேவைகள் சமம் வேண்டும்.
காவல்கள் சேமம் வேண்டாம்.
ஆசைகள் நலம் வேண்டும்
அடைபாவத் தூபம் வேண்டாம்,

நியாயங்கள் நெஞ்சில் வேண்டும்.
நீதிமன்றம் நாட வேண்டாம்
சத்தியம் போற்ற வேண்டும்.
சட்டங்கள் ஏற்ற வேண்டாம்.

அனைவர்க்கும் கல்வி வேண்டும்.
அதுபேரம் ஆக வேண்டாம்.
வாழவொரு வேலை வேண்டும்.
ஆனபின் ஊழல் வேண்டாம்.

உழைப்பதில் உண்மை வேண்டும்.
பிழைப்பதிற் சிறுமை வேண்டாம்.
கடமையிற் திண்மை வேண்டும்.
உடமையில் வன்மை வேண்டாம்.

வேதங்கள் படிக்க வேண்டும்.
பேதங்கள் பேச வேண்டாம்
பண்பினைப் பழக வேண்டும்.
பாவங்கள் நிலவ வேண்டாம்.

கொண்டதிற் பற்று வேண்டும்.
பணடதிற் அற்று வேண்டாம்.
தொண்டதிற் கட்டு வேண்டும்.
மண்டதிற் கெட்டு வேண்டாம்.

சமுதாயம் ஒன்று வேண்டும்.
சாதிகள் என்று வேண்டாம்
பேசவொரு மொழி வேண்டும்.
பிறமொழிகள் இழி வேண்டாம்.

காதல் மண்ணில் மீள வேண்டும்.
சாதி மதம் ஆள வேண்டாம்.
மனிதம் கண்ணில் ஒளிர வேண்டும்.
மடமை நெஞ்சில் துளிர வேண்டாம்.

சமத்துவம் அடைய வேண்டும்.
சலுகைகள் விழைய வேண்டாம்.
எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்.
இல்லாமை இருக்க வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.





வேகம் வேண்டாம்.

வேகம் எதற்கு?

இத்தனை வேகமெதற்கு?
அத்தனை அவசரமோ உமக்கு!!
அவசியமான அவசரமானாலும்
விவேகமான வேகமானாலும்
விளைவுக்கு உத்ரவாதமில்லை.
விளக்கிட வேறெதுவுமில்லை.

அவசரமும் வேகமும்.அனுபவமின்மை.
திடீர்த் திட்டஙகளும் திடீர் முடிவுகளும்.
அவசர வேகங்களின் அன்னை தந்தை.
காலத்தின் வேகத்திற்கு ஈடிருக்கலாம்
காலத்தை முந்தும் முயறசி வேண்டாம்.
காலமெப்போதும் அவசரப்படுவதில்லை..

வேகப்பயணமே மகிழ்ச்சியானால்
போகுமிடமோ பூமியைத் தாண்டுமே!
ஆகுஞ்செயலுக்கு அவசரமாகாது.
ஆவது நலமானால் போவதெது?
வாழத்தானே முயலுகின்றோம்
வேறெதற்கு வேகமோ!அவசரமோ!

பொறுமை வாழ்கவென்றேனே
புரியவில்லையோ உமக்கு.!!
பிறவி கிடைத்ததே அதிசயம்.
பேணுவதெவ்வளவு அவசியம்!
அவசரமும் வேகமும் ஆபத்தின்
அழைப்பென்றே அறிவீரேவாழ்வீரே!!


கொ.பெ.பி.அய்யா.







வெள்ளை வெளுத்திடும்.

வெளுத்திடுமா வெள்ளை?

பொழுதும் வெளுத்து அலுத்துவிட்டேன்--நானும்
புறப்படத்தான் போகின்றேன்.
அழுதும் முடித்து ஓய்ந்துவிட்டேன்--பின்னும்
ஆயிரமாய் தொடர்வாரே!

அழுக்கும் தொலைந்து ஒழியவில்லை--ஏனோ
வெளுத்தும் வெள்ளை ஆகவில்லை.
இழுக்கும் கலைந்து அழியவில்லை--நானோ
வெளுத்தும் பயனுமில்லை.

தினமும் வெளுத்திருந்தால் நலமே--தூய்மை
துணியில் தொடர்ந்திருக்கும்.
என்றோ வெளுத்தயிது முழுமை--வெளுமை
இன்றே ஒளிர்ந்தும் மிளிராது.

வள்ளுவன் காலம் தொட்டுப் புலவர்--எல்லாம்
அள்ளி வெளுத்துவிட்டார்.
இன்னும் தீரவில்லை வெளுத்தும்--அதனால்
ஒன்னும் மாறவில்லை,

ஆசை அழுக்கினை அகற்றிடப் புத்தன்--அவனும்
அலசித் துவைத்தாலும்
வேசை போலவே விடாது பற்றி--மனிதம்
வெளுத்த பாடில்லையே!

புத்தன் வெளுத்தும் அழியா மலங்கள்--இவை
எத்துணைதான் வெளுத்திடும்
சித்தம் மாசில் புத்தம் பேசுங்கொடிய--அவனின்
பித்தம் யார் வெளுப்பார்?

உயிர்கள் வதையா மனிதம்  தானே--மதங்ள்
உரைக்கும் மறைமொழிகள்.
உள்ளம் வெளுக்க எழுந்ததுதானே--வதங்கள்
உலகில் செய்திடுமோ!

ஊழல் கறையோ ஒழிந்த பாடில்லை--ஆடை
கிழியும் வரையும் அழியாது.
சாதி மதப் புகையிலைக்கறையை--கரை
வேதி மருந்தும் வெளுக்காது

தர்மம்  வெளுக்க உழைத்தது--எல்லாம்
வர்மச் சேறாய் ஆனது.
கர்மம் கண்ணாய் வெளுத்தாலும்--தீய
கறையொழிந்தும் தீராது.

தீரா அழுக்கை பூராம் வெளுக்குமோ--தீர
ஊராச் சேர்ந்து வெளுத்து
தாரா வெள்ளை ஆராக் காத்து--மனது
நேராய் வாழப் பழக்லாம்.

கொ.பெ.பி.அய்யா..







அரசுத் துறை.

வீணாத்தான் போனதோ!

வருவாய் தருவாய் பெறுவாயென
தெருவாசல் நின்றழைக்கும் வேசியென
அரசுத் துறையினரும் இழிக்கிறார்
கருமஞ் செய்திடவும் கைக்கூலி கேட்கிறார்.

வசூல் ராசாக்களின் கோட்ட அலுவலங்கள்
மாமூல் தாதாக்களின் வட்டார மையங்கள்.
சுங்கப் பங்குகளாய் அங்கங்கு வேட்டைகள்.
எங்கும் கொள்ளைகள் இவர்களே காவலர்கள்!.

இதுதான் சாதனையோ!
இதற்குத்தான் சுதந்திரமோ!
எத்தனை தியாகங்கள்!
எத்தனை உயிர் பலிகள!
அடசண்டாள நீசர்களே!!
விடுதலைப் போராட்டமே
வீணாத்தான் போனதோ!
வீணரிடம் அடிமையோ!

கொ.பெ.பி.அய்யா




கடற் தாயே!

வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உன்னை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தேன்
வாழும் குடும்பம் வகை நினைத்தேன்.
வீழும் மீன் பாடு கண்டு நின்றேன்
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதோ!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.




























வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.














வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.




























வங்காளத்தாயே!

வான் தழுவும் வங்காளத்தாயே!
நான் உன்னை வணங்குகிறேன்.
ஏனென்றும் கேட்பாயோ!
எமை விரட்டும் பாவியரை!

உனை நம்பி வாழுகிறேன்
உயிர் காக்கும் மாதாவே!
தினம் தினம் போராட்டம்
திரும்புவதும் உறுதியில்லை!

வலை கொண்டு வீசுகிறேன்.
வயிற்றுக்காக வாழுகிறேன்.
கொலைகாரப் பாவியர்கள்
வலையறுத்து வீசுகிறார்.

ஏனென்று கேட்டால் அவன்
எம்மை நோக்கிச் சுடுகிறான்.
எத்தனை எத்தனை காயங்கள்!
எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்!

ஆழம் சென்று வலை விரித்தால்
வாழும் எம் குடும்பமென்று
வீழும் மீன் பாடு கொண்டு
வீடு வர நீதமில்லை!

கண்ணீரில் மனைவி மக்கள்
காத்திருப்பர் கரையினிலே!
என்ன கொண்டு போவதோ
என் தாயே வங்காளம்மா!

யாரை யாம் கொள்ளையிட்டோம்?
யார் குடியைத்தான் கெடுத்தோம்?
அன்னை உந்தன் மடிதானே
எம்மைக் காக்கும் அட்சயமே!.

கடலையுமா பங்கு போட்டார்
கடன்காரப் பாவியர்கள்!
தடமழிந்தும் சாவோமோ
தாயுமுன்னை இழப்போமோ!

இனமழிக்கும் கூட்டம்தானே
இலங்கையை ஆள்கிறதே!
என்ன குற்றம் செய்தோமோ!
எம்மைச் சிறைப் பூட்டுவதோ!

கடல் உன்னை நம்பித்தானே
காலமெல்லாம் வாழுகிறோம்.
இடமில்லை என்றடித்தால்
எங்கே போவோம் எம் தாயே!

அந்த நாள் சொந்தம் அது.
அரசர் சேது சொத்து அது.
எந்த நாள் விலை கொடுத்தான்.
இலடசத்தீவும் பறி கொடுத்தோம்.

இத்தாலியன் ஒருவனுக்கு
இந்தியா கொதிக்கிறது.
சொந்த இரத்தம் சிந்துவதை
எந்த சொந்தம் காப்பதுவோ!

ஒன்றுபட்ட இந்தியாவை
கணடோமெனச் சொல்வோரே!
தமிழகமும் உலகமிதில்
தனித்துப் படம் வரைந்ததோ!

இந்தியாவின் வரைபடத்தில்
இன்னும் தமிழ் வாழ்கிறது.
சிந்தும் இரத்தம் சேரும்போதும்
இந்தியாவும் கரைந்து போகும்.

மூத்த தமிழ் வரலாறு
மூவுலகும் அறிந்தது..
காத்த புகழ் வீழாது.
காலம் நீ பதில் கூறு.

இலங்கையவன் நண்பனானால்
இங்கு தமிழ் எதிரியோ!
சலங்கை கட்டி ஆடவிட்டால்
இலங்கை சென்றும் போர் முடிப்போம்.

ஏதாவது வழி காண்பீர்!
இலங்கையை அடக்குவீர்!
பாது காக்கத் தவறி நீவீர்!
பாதை தேடத் தூண்டாதீர்!

கொ.பெ.பி.அய்யா.

















































வந்தே மாதரம்.

வந்தே மாதரம் மந்திரம்!!

ஆகப் பல பத்து ஆண்டுகள்
ஆகித்தான் கடந்து போனாலும்
இனியொரு சுதந்திரம் விழைகிறோம்.
எழுப்பித்தான் மகானை அழைக்கிறோம்

பணத்தின் தாகம் ஊழல் மோகம்.
இனத்தின் மோகம் தீவிரவாதம்.
கணத்தின் மோகம் பிரிவினை பேதம்
குணத்தில் போகம் மாறி விளையுமோ!

இந்திய ஒருமையும் நீர்த்துப் போனதோ!
சிந்திய இரத்தமும் காய்ந்து ஆனதோ!
பிந்திய இன்றும் சிந்தியும் வீணே!
அந்நியம் பேசி பிரிவதும் ஏனோ!

பரந்த தேசத்தின் விரிந்த ஆளுமை!
சிரமத் தீர்வே குறைந்த ஆளுகை!
நிறைந்து மாநிலம் வளரும் சீருமை!
புரிந்த மொழியில் ஆள்வதே அருமை!.

இன்னும் ஏனோ மேலும் பிரிவினை!
என்ன பெருமை இதனின் செய்வினை!
நன்னும் வலிமை இழியும் இவ்வினை
பின்னும் வேண்டாம் உணர்வீர் திருவினை!

நச்சாகிப்போனதோ நம்முன் நாகரிகம்!
இச்சைப்படுமோ பச்சை இரத்தமும்!
கொச்சைப்படுமோ சுதந்திர யோகம்!
மிச்சமாகுமோ இந்திய தேசம்!

அன்னிய மோகம் சூன்ய மேகம்!
அதனால் ஆவதோ அடிமை சோகம்!
எண்ணிடக் கொதிக்கும் குருதி வேகம்!
பின்னிட வேண்டாம் இனியொரு சாபம்!

சில்லரைத் தொழில்கள் சிதைந்தும் போனால்
வல்லார் ஆதிக்கம் வளர்ந்தும் ஆனால்
இல்லார் என்றால் இந்தியர் என்றே
சொல்லுங் கேவலம் சுதந்திரமாகும்.

நாடு விட்டு நாடுகள் அலையும்!
கூடு கட்டி விட்டுமே பறக்கும்!
தேடுவது தேடி வீடு திரும்பும்!
வீடு இருக்கும் சோடி மறக்கும்!

சொந்த நாட்டின் பணத்தில் படிப்பார்.
சென்ற நாட்டின் மணத்தில் துடிப்பார்,
மனித வளங்களை மாற்றார்க்கிறைப்பார்.
இனியும் அடிமை மோகம் நிறைப்பார்.

பேதமை உணர்வு வேதனை ஊழல்
ஏதங்கள் அழிந்து எந்நாள் விடியும்?
சாதனை அதுதான் சாதிக்க முடிந்தால்
சோதனை யாவும் தீர்ந்தே முடியும்.

என்று தணியுமந்த சுதந்திர தாகம்!
என்று தணியுமிந்த அடிமை மோகம்!
என்று உணருமந்த பிரிவினை வேகம்!
என்று ஒழியுமிந்த பேதமை சோகம்!

ஒன்றே உணர்வு நன்றேயென்று,
இன்றே நின்று இந்தியனென்று,
வந்தே மாதரம் மந்திரமென்று,
கொண்டால் ஆவோம் வல்லரசென்று.


கொ.பெ.பி.அய்யா.