Sunday 6 July 2014

ஊருக்குத் தெரியும்.


ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியும் உன்னோட பொழப்பு.
தேருக்கு எதுக்கு தேடுற அழப்பு?
மோருக்குக்குத் தயிருன்னு பேரென்ன சிறப்பு?
யாருக்குப் புரியாது ஆளோட இருப்பு!

என்னென்ன வேசங்கள் இன்னும்தான் போடுற
கண்ணென்ன மோசமா கதமாத்தி ஆடுற
முன்னாடி பின்னாடி கண்ணாடி மூடுற
என்னான்னு எல்லாந்தான் தன்னால காட்டுற.!

வேட்டி ரெண்டாக் கிழிஞ்ச துன்னு 
மாத்தி மாத்திக் கட்டுற—அப்போ
வேலி தாண்டித் திருடும் போது 
கிழிஞ்ச கதையும் மறக்குற.

கோவணமும் உருவிவிழும் கேவலமானாலும்.
காரணமும் காத்துன்னுதான் களவுசொன்னாலும்.
பாவாட திருடவந்த படுவாமாட்டுனே!--செவிடனுக்கும்
சேவல்கூவும் சத்தம் கேக்குண்ணே!

மானம் கெட்டுப் போனே யின்னும்
மாரில் சுட்டக் கோடு ஒண்ணும்
வானம் முட்டக்கூறிச் சிரிக்குமே-
ஊரில் ஏண்டா பொய் உனக்குமே.?.  

கள்ளம்கொண்ட உள்ளம்கொண்டு பள்ளம் நோண்டயிலே
வெள்ளம்கண்டு உள்ளமுங்கி துள்ளும் போதிலே
சொல்லும் சொல்லும் கொல்லுமென்ற மெய்யறியாமலே
அள்ளும்ஊரைக் கொல்லென்பயோ வாய்க் கொழுப்பாலே!

உன்வினையே உன்னழிவே ஆனதென்றாலும்
ஒப்புக்கொள்ள மறுத்தாலும் உண்மையதுவாகும்.
தொலைத்த இடம்தேடாமல் பழிப்பதென்னாகும்?
பிழையறியா மூடனே பேச்சென்னாகும்?

சொந்தங்களும் சுற்றங்களும் சுத்தம் செய்யாமல்
வந்தபழி என்னவென்றும் கற்றும் கொள்ளாமல்.
நொந்துமற்ற நேயங்களை குற்றம் சாற்றினால்
எந்தஊர் நாயமாகும் சற்றும் அறிவினால்.
.
கொ.பெ.பி.அய்யா.