நாடார் குலத்தின் நம்பக நட்சத்திரம்.
நம்ப முடியாத அதிசய விசித்திரம்.
ஈடாகாது எந்த மனிதரும்--வளர்
நாடார்குல அடையாளம் காமராஜர்.
எத்தனை உலகம் இன்னும்
தோன்றினாலும்
அத்தனை மனிதரில் மொத்தம் தேடினாலும்
சத்தியம் யாரவர் சரிநிகர் காமராஜர்
சாத்திய மாகுமோ சரித்திரம் காட்டு மோ!
விருது நகர் கண்ட விருது தானவர்.
அரிதானவர் அவர் போல் யார் மனிதர்?
நெறிதவறாப் புனிதர் நேர்மை இனிதர்
நிசமாய் கண்ட காமராச ரவர்.
தாயானாலும் தள்ளி வைத்தவர்.
தேயம் பெரிதெனத் தனியே வாழ்ந்தவர்.
தன்னலம் பாராது தமிழகம் ஆண்டவர்
தனக்கென யெதுவும் தானே தேடாதவர்.
படிக்க வைத்துப் பாடம் சொன்னவர்.
விடியலைக் காட்டி வேளாண்மை காத்தவர்.
அணைகளைக் கட்டி வெள்ளம் தடுத்தவர்.
மனையும் தொழிலும் தந்த தந்தை யவர்
.
பிரதமப் பதவியை பெரிதென மதித்தவர்
பிறரைத் தேர்ந்தே சரியென விதித்தவர்
ஏழையாய் பிறந்து ஏழையாய் ஆண்டு
ஏழை சிரிப்பில் இறைவனாய் ஆனவர்.
கவிஞர். கொ. பெ. பிச்சையா.
No comments:
Post a Comment