உயிருள்ள பிணங்கள்!!!!!!!!!!!!
தொலைக்காட்சிப் பெட்டிகளை
தூக்கித்தான் போடலாமா1
கொலைக்களக் காட்சிகளால்
கொல்லுகிறார் தினந்தினம்
கொல்லும்போது பார்ததிருந்தோம்
கொன்றவனை விட்டுவைத்தோம்
விலைமாதர் போல்தானன்று
விற்றிருந்தோம் உணர்வுகளை.
செய்திகளை ஒளித்துவைத்து ..
சிறகுகளை முறித்துப்போட்டு
இன்றெழுந்த எழுச்சிகளை
அன்றழித்தார் பாவிகள்...
குழிபதுங்கியொளிந்தோரும்
குற்றுயிராய் துடித்தோரும்
பொய்யான செய்திகளால்
மெய்காட்டி மாண்டனர்.
கொலைக்களக் காட்சிகளை
வலைத்தளம் காட்டுதின்று.
மழையோய்ந்து போனாலும்
தூரல்மட்டும் ஓயவே இல்லை.
கடலலையும் செய்திசொல்லும்
காதவழித் தூரந்தான்..................
உயிருள்ள பிணங்களாக
ஒதுங்கியே கிடந்துவிட்டோம்..
கனவிலே கதறுகிறான்
கண்மணி பாலச்சந்திரன்.
அன்றெழுந்து விழித்திருப்பீரானால்!!!!!!!!!!
அழிந்திருக்க மாட்டோமென்றான்.
.
No comments:
Post a Comment