Tuesday 18 February 2014

வீடு ஒரு கனவு.

வீடு

வீடு..... அதுதான்
அனைவரது கனவு.
சொந்தமாக ஒரு வீடு
அதுதானே சுகம்
சுதந்திரம் எல்லலாமே.
வாடகை வீடு..........
வசதிகள் கரைகிறது.
ஆனால்.............................
வாடகை மட்டும்
 வருடா வருடம் ஊதுகிறது.
மின்சார கட்டணமோ!
அது ஒரு......................
குட்டி வாடகை.
மற்றும் முறைவாசல்
தண்ணீர்க்கென
இப்படி எத்தனையோ
துணை வாடகைகள்.
சட்டமன்றங்களில்
எதையெதையோ
பேசுகிறார்கள்--ஆனால்
இதைமட்டும் பேச
அஞ்சுறார்கள்.
ஓட்டு வங்கியைக்
கணக்குப் போட்டு
ஒதுங்கி விடுகிறார்கள்.
ஆளுக்கு ஒரு
வீடு என்கிறார்கள்.
ஆனால் அதுவும்
அரசியல்வாதிகளுக்கே
அலாட்டாகி விடுகிறது.
ஏழையைக் காட்டிப்
பேசுகிறார்கள்.--ஆனால்
பிழைப்ப தெல்லாம்
பெரியவர்கள்தான்.
அன்றாட உழைப்பு
அரை வயிற்றுக்கும்
போதவில்லை.
மையானத்தில்கூட
இடமில்லை.
மைதானங்களும்
காலி இல்லை.
அவரவர் ஆட்சியில்
அவரவர் வளைத்துக்
கொண்டார்கள்.
விலைவாசியோ
விண்ணை  முட்டுகிறது.
நிலம் என்பதோ
நித்தரையிலும்
தோன்றவில்லை
உறக்கமும் தொலைந்தது
ஓய்வெடுத்தால்
கஞ்சியில்லை.
மனைகளோ!
இலட்சங்கள் கோடிகள்.
விலங்குக்குக் குகையுண்டு
ஆட்டுக்கும் மாட்டுக்கும்
தொழுவம்  உண்டு
கோழிக்கும் கூண்டுண்டு.
பறவைக்கும் கூடுண்டு..
ஆனால் மனிதனுக்கு.................!

.வீடு ..................!.அது
ஒரு கனவு.



கொ.பெ.பி.அய்யா






No comments:

Post a Comment