Tuesday 18 February 2014

பாதி உண்மை.

பாதி உண்மை

பாதி உண்மை ஒப்புதலை--நீசபச்சே
பாவி நீ  உளறினாய்.
மீதியும் கூறச் செய்யும்--.நா
மன்றம்  உன்னை விடாது...

.நா.சபைத் தீருமானம்--எதிராய்
ஆதரவும்  விரியுது.
அகிலமே உனைக் கேட்க-ஒன்றி
ஆர்பபரித்து எழுகுது.

கொத்துக் கொத்தாய் கொன்றவனே!--நீசக்
கொலை  கார வெறியனே.!!
பார்க்கப்   பார்க்க  பாலகனை--பாவி!!
பதைக்கப் பதைக்கச் சுட்டதேனோ!

நீதி யுன்னை  விடுமோடா!!--பச்சே
நீசனே நில்லடா...வருவாயோ?
போர்க் குற்றவாளி   நீ--உனக்குப்
பிடி வாரன்டும்   வருமடா...

விலங் குனக்கு விலங்கிட்டு--பட்டு
விழ விழவே   காலுதைத்து
வீதி  வலமாய் கரகரவென-உனை
இழுத்துவர வாடா  சண்டாளா..!!

காரிக் காரி உமிழ்ந்திடுவர்..வீதி
காண் போரெல்லாம் இடித்திடுவர்..
தூக்கு மேடை   உறுதியடா.--மானுடம் 
வாக்கு  எழுதும்  தீர்ப்படா..

கொ.பெ.பி.அய்யா 

No comments:

Post a Comment