எழுகவே!விரைகவே!
எழுகவே! நண்பா! விரைகவே!
ஈழநாடு பெற்றிடவே எழுகவே!
எழுகவே! நண்பா! விரைகவே
வீட்டுக்கொரு புலியெனவே
எழுகவே! நண்பா! விரைகவே!
வீறுகொண்டு அணியணியாய்
எழுகவே! நண்பா! விரைகவே!
ஆறுபோன்று ஆர்ப்பரித்து
எழுகவே! நண்பா! விரைகவே!
தமிழனென்று சொல்லுவோம்
தலைநிமிர்த்தி செல்லுவோம்..
ஒன்றுபட்டுத் தமிழினம்..
எழுகவே! நண்பா! விரைகவே!
அறவழியே பற்றுவோம்.
அகிம்சை நெறி போற்றுவோம்.
உரிமைக்குரல் ஏற்றுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!
மாணவரின் வலிமையே
மண்ணுணர்ந்த உண்மையே
மறுநினைவு செய்யவே
எழுகவே! நண்பா! விரைகவே!
அறுபத்தைந்தின் எழுச்சியே
அகிலங்கண்ட காட்சியே
அணிதிரண்டு உணர்ததவே
எழுகவே! நண்பா! விரைகவே!
தீப்பொறிக் கணங்களாம்.
திக்குநோக்கிப் பாயுவோம்.
காற்றுத்தீயாய் பரவுவோம்
எழுகவே! நண்பா! விரைகவே!
அனுமனின் படையிதாம்
ஆழ்கடலும் என்னவாம்!
ஈழமதை மீட்டுவோம்.
எழுகவே! நண்பா! விரைகவே!
ஏற்றப்பட்ட தீயல்ல
எழுந்தெரியுந் தீயிது
எரிமலைப் பிழம்பென
எழுகவே! நண்பா! விரைகவே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment