Tuesday 18 February 2014

மலர்களின் பாக்யம்.


மலர்கள் செய்த பாக்கியம்

கொடியில் பூத்த இந்தப் புதுமலர்கள்
விடியல் கண்டாடுகின்றன!
இன்னும் சில மணித்துளில்
மண்ணில் உதிர்வதையும்
மறந்தே சிரிக்கின்றன---ஆனால்
இப்போதுவரை அது தன்
தாயின் மடியிலேயே துயில்கின்றன!
தொட்டியில் விழும்
குழந்தைகள் மட்டும் ஏன்
பிறக்கும் போதே அனாதைகளாகின்றன!
மலர்கள் செய்த பாக்யமென்ன?


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment