Monday 17 February 2014

போராட்டம் ஏன்?

தமிழனென்றே சொல்லுவோம்!

என்ன சொல்லி வருவதோ!
என்ன செஞ்சி கிழிப்பதோ!
யாரை இங்கு குத்தம் சொல்ல!
ஊரைத்தான் கேட்கோனும்!

யாருக்கென்ன லாபமோ!
போருக்கென்ன தேவையோ!
சாதிக்கொரு நீதி என்றால்
சலுகையென்ன மிஞ்சுமோ!

சாதியென்ன சாதியோ!
சண்டையென்ன நீதியோ!
வீதியிங்கே சிவக்குதே!
மீதியென்ன இருக்குமோ!

மொத்தமா சேந்திழுத்தா
சத்தமின்றி நகருமே!
ஒத்தையா என்ன செய்ய!
முத்தையா சொல்லய்யா!

தமிழனென்று சொல்லுவோம்!
தலைநிமிர்த்திச்செல்லுவோம் !
ஒன்று சேர்ந்து பச்சேயை
வென்று வெற்றி காணுவோம்!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.







No comments:

Post a Comment